நடிகர் கமலஹாசனின் சுற்றுப்பயண விபரம் வெளியீடு

பிப்.,21ல் நடிகர் கமலஹாசன் மேற்கொள்ள இருக்கும் அரசியல் பயண விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒரே நாளில் 4 பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளுமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்.,21ல் நடிகர் கமலஹாசன் மேற்கொள்ள இருக்கும் அரசியல் பயண விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒரே நாளில் 4 பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளுமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்துள்ள கமல் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். வரும் 21-ல் ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை துவக்க உள்ளார். இதற்கு ”நாளை நமதே” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அன்றைய தினமே மதுரையில் முதல் பொதுக்கூட்டம் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கமலின் சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, 21-ம் தேதி காலை 07.45 மணிக்கு அப்துல்கலாம் இல்லத்திற்கு வருகிறார். காலை 8.15 மணிக்கு அப்துல்கலாம் படித்த பள்ளிக்கும் செல்லும் அவர், காலை 8.50 மணியளவில் கணேஷ் மஹால் பகுதியில் மீனவர்களைச் சந்திக்க உள்ளார்.

காலை 11.10 மணியளவில் அப்துல்கலாம் நினைவிடத்திற்கு செல்லும் நடிகர் கமல், அங்கிருந்து 11.20 மணிக்கு மதுரை கிளம்புகிறார். நண்பகல் 12.30 மணியளவில் ராமநாதபுரம் அரண்மனை நுழைவாயிலில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. பிற்பகல் 02.30 மணியளவில் பரமக்குடி ஐந்து முனை சாலையில் லேனா மஹாலுக்குச் சற்று முன் அமைந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது. பிற்பகல் 03 மணிக்கு மானாமதுரை ஸ்ரீபிரியா தியேட்டருக்கு அருகே பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 05 மணிக்கு மதுரை வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு எதிரே உள்ள ஒத்தக்கடை மைதானத்திற்கு வரும் நடிகர் கமல், 6 மணிக்கு கட்சி கொடி ஏற்றுகிறார். மாலை 06.30 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இரவு 8.10 முதல் 9 மணி வரை உரையாற்ற உள்ளார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...