"காவிரி நீரை இன்றே திறந்துவிட்டாலும் 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் காய்ந்துவிடும்"

உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படி காவிரி நீரை இன்றே திறந்துவிட்டாலும் 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் காய்ந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படி காவிரி நீரை இன்றே திறந்துவிட்டாலும் 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் காய்ந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர்  நல்லசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் கொண்டாடியது மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஓராண்டில் செய்த சாதனை. இதற்காக குறைந்தது 60 நாட்கள் வீணடித்ததை தான் ஓராண்டு சாதனை என்று கருதுகிறார்கள். அரசுப் பணிகளை கவனிக்காமல் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்ததிட வேண்டுமா? என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் படி காவிரி நீரில் 14.75 டி.எம்.சி நீரை இழந்துள்ளோம். தமிழகத்தில் விவசாயிகள் பயன்படுத்தி வந்த 10 டி.எம்.சி நீரை தற்போது கர்நாடகா தொழிற்சாலைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலையின் கழிவு நீர் காவிரி நீரில் கலக்கப்படு அபாயம் ஏற்பட்டுள்ளது. உரிமை நீரை இழந்து கழிவு நீரை பெறும் தீர்ப்பாகவே இந்த தீர்ப்பினைக் கருதுகிறோம்.

காவிரி பிரச்சனையில் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி. அரசுகள் பிரித்து ஆளுகின்ற சூழ்ச்சியை கையாண்டு வருகின்றன. தமிழ்நாட்டையும், கர்நாடகத்தையும் மோத விட்டு காவிரி பிரச்சனையில் வேடிக்கை பார்த்து வருகின்றனர். இந்தத் தீர்ப்பே அதற்கு சாட்சியாகும். கர்நாடகாவில் தற்போது தேர்தல் வர உள்ளது. இதனை எதிர்பார்த்தும் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் படி காவிரியில் தண்ணீர் திறந்து விட்டாலும் 5 இலட்சம் ஏக்கர் நெல் பயிர்கள் கருகி விடும். இதனால் தமிழ்நாட்டு விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்திக்க இருக்கின்றனர். இதன் விளைவு தற்கொலைக்கு தூண்டும்." என்று அவர் பேசினார். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...