ஜப்பான் செல்ல தேர்வாகியுள்ள மேட்டுப்பாளையம் மலைக்கிராம மாணவி

மாணவர்கள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் பயிலும் மேட்டுப்பாளையம் மலைக்கிராம பழங்குடியின மாணவி ஜப்பான் செல்ல தேர்வாகியுள்ளார்.

மேட்டுப்பாளையம்: மாணவர்கள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் பயிலும் மேட்டுப்பாளையம் மலைக்கிராம பழங்குடியின மாணவி ஜப்பான் செல்ல தேர்வாகியுள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள தமிழக கேரள எல்லையோரத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது வெள்ளியங்காடு என்னும் கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் செயல்பாடும் கற்பித்தலும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றது.

மலைக்காட்டின் நடுவே உள்ள பில்லூர் அணையைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட பழங்குடியின மலைக்கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகளை ஊக்குவித்து சிறந்த கல்வியினை கொடுப்பதோடு அவர்களை விளையாட்டு, அறிவியல் ஆக்கம் என அனைத்து வகையிலும் மேம்படுத்தி பெருநகரப்பகுதியில் பல்வேறு வசதிகளோடு இயங்கும் பெரிய தனியார் பள்ளி மாணவ மாணவிகளோடு போட்டியிட்டு வெற்றி பெறும் அளவிற்கு இந்த அரசுப்பள்ளியின் செயல்பாடு அமைந்துள்ளது.



கடந்த பத்தாண்டுகளாக பத்தாம் மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளில் நூறு சதவிகதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வரும் இந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்போது பழங்குடியின மாணவ மாணவிகள் மட்டுமல்லாது மேட்டுப்பாளையம், காரமடை போன்ற நகர பகுதியில் இருந்தும் கூட பலரும் இப்பள்ளியில் சேர்ந்து பயில ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பொதுத் தேர்வுகளை சந்திக்கவுள்ள மாணவ மாணவிகளுக்குப் பள்ளி முடிந்த பின் சத்தான சிற்றுண்டி வழங்கி மாலை நான்கு முதல் ஆறு மணிவரை இரண்டு மணிநேரம் சிறப்பு வகுப்புகள் எடுக்கும் இப்பள்ளியின் ஆசிரியர்கள், தினசரி அதிகாலை சரியாக ஐந்து மணிக்கு தவறாமல் அவர்களது பெற்றோர்களை செல்போன் மூலம் அழைப்பு விடுத்து மாணவர்களை படிக்க எழுப்பிவிடுமாறு பரிந்துரைக்கின்றனர். அதோடு, இன்று என்ன படிக்க வேண்டும் என சிறு கலந்துரையாடலும் நடத்துகின்றனர். 

பள்ளி நிர்வாகத்தின் இந்த ஊக்கமே சரியான பேருந்து வசதிகூட இல்லாத கிராமங்களில் இருந்தும் கூட மாணவர்களை பள்ளி வர தூண்டுகிறது. எப்போதும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள மலைக்கிராமங்களில் இருந்து சிரமத்தை பொருட்படுத்தாமல் பில்லூர் அணையின் நீர்த்தேக்கத்தைப் பரிசல்கள் மூலம் கடந்தும் இப்பள்ளிக்கு பழங்குடியின மாணவ மாணவிகள் ஆர்வமுடன் தினசரி கல்வி கற்க வருவது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான்

இந்நிலையில், ஜப்பான் - ஆசிய மாணவர்கள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் ஜப்பான் செல்வதற்கு இப்பள்ளியில் பயிலும் ஒரு பழங்குடியின மாணவியும் இங்கு கல்வி கற்றுத்தரும் ஆசிரியை ஒருவரும் தேர்வாகியுள்ளனர். இது இந்த அரசுப்பள்ளியின் மற்றுமொரு சிறப்பாக அமைந்துள்ளது.



இந்த ஆண்டு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஜப்பான் – ஆசிய மாணவர்கள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் இருந்து அறிவியல் பாடத்தில் சிறந்து விளங்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் மூலம் ஜப்பானுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலிருந்தும் 96 மாணவர்கள் மற்றும் 16 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



அதன்படி தமிழகத்தில் இருந்து ஐந்து மாணவர்களும் ஒரு ஆசிரியையும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் காளியப்பனூர் என்னும் மலைக்கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி எம்.சவிதா மற்றும் இப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியை ஆர்.மகேஸ்வரி தேர்வாகி கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.



இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இருந்து தேர்வான ஒரே ஆசிரியை என்ற பெருமையை மகேஸ்வரி பெற்றுள்ளார். அடர்ந்த வனத்தின் நடுவே போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லாத இப்பகுதி மலைக்கிராம பழங்குடியின மக்கள் சுமார் பத்து கிலோமீட்டர் நடந்தும் 80 கிலோமீட்டர் பேருந்துகளில் பயணித்தும் கோவை போன்ற நகரப்பகுதிக்குச் செல்வதே மிக மிக அரிதானது என்ற நிலையில், தங்களது கிராமத்தில் இருந்து ஒரு சிறுமி மத்திய அரசின் செலவில் விமானத்தில் பறந்து ஜப்பான் போன்ற வெளிநாட்டுக்குச் செல்லவுள்ளது இப்பகுதி மலைவாழ் மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...