வங்கதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த மகளின் உடலை மீட்டுத் தர வலியுறுத்தல்

வங்கதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள தங்களது மகளின் உடலை மீட்டு தர வலியுறுத்தி அவரது பெற்றோர்கள் பெற்றோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் : வங்கதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள தங்களது மகளின் உடலை மீட்டு தர வலியுறுத்தி அவரது பெற்றோர்கள் பெற்றோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் முருகானந்தம். இவரது 17 வயது மகள் பூர்ணாதேவியை  கடந்த 2016-ம் ஆண்டு மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த ரிமுஷேக் என்பவர் கடத்தி சென்று திருமணம் செய்துவிட்டதாகவும், இருவரும் அண்டை நாடான வங்கதேசத்திற்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, பூர்ணாதேவி அவ்வப்போது தனது பெற்றோரிடம் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி முருகானந்தத்திற்க்கு அழைத்த ரிமுஷேக், பூர்ணாதேவி உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

மகளின் மரணத்தில் சந்தேகமடைந்த முருகானந்தம், செல்வ கோமதி தம்பதியினர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமாவிடம் தங்கள் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் புகார் அளித்தனர். அதனடிப்படையில், திருப்பூர் போலீஸார் நடத்திய விசாரணையில், ரிமுஷேக், பூர்ணாதேவி இடையே கடந்த 9-ம் தேதியன்று சண்டை நடந்துள்ளதாகவும், இதனையடுத்தே புர்ணாதேவி இறந்துள்ளதாக அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் தெரியவந்துள்ளது. மேலும், பூர்ணாதேவியின் உடலைக் கைப்பற்றிய வங்கதேச போலீஸார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியதும் திருப்பூர் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், தங்களது மகள் உடலை சொந்த ஊரான திருப்பூருக்கு கொண்டு வர வேண்டும், தனது மகள் மரணத்தில் உள்ள சந்தேகங்களை கலைய வேண்டும், தங்கள் மகள் இறப்பிற்கு காரணமான ரிமுஷேக்கிற்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பூர்ணாதேவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமியிடம் மனு அளிததனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...