காட்டெருமை தாக்கியதில் தோட்ட வேலைக்குச் சென்ற பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் உதகை அடுத்து கல்லட்டி பகுதியில் காட்டெருமை தாக்கியதில், தோட்ட வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அடுத்து கல்லட்டி பகுதியில் காட்டெருமை தாக்கியதில், தோட்ட வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

அடர்ந்த வனப்பகுதிகளை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் உள்ளன. அவ்வப்போது இந்த வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இதனால், வேலைக்குச் செல்பவர்கள் வனப்பகுதியில் உள்ள சாலை வழியே பணிக்கு செல்லும் போது வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாவதோடு உயிர்ச் சேதமும் ஏற்படுகிறது.மேலும், தேயிலை தோட்டங்களிலும், விவசாயம் செய்யும் நிலங்களிலும் வனவிலங்குள் சேதப்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில், இன்று உதகையை அடுத்துள்ள கல்லட்டி அண்ணா நகர் பகுதியில் தோட்ட வேலைக்குச் சென்று கொண்டிருந்த அன்னலட்சுமி (55) என்பவரை, அங்கு மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை திடீரென தாக்கியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அன்னலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இதனிடையே, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் நகர்ப்பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை தாக்குவது வாடிக்கையாகி விட்டதாகவும், எனவே, இதனைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...