'பாரதியார் பல்கலைக்கழக லஞ்ச விவகாரம் கடந்தாண்டே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது'

பேராசிரியர் நியமன லஞ்ச விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டே ஊழல் தடுப்பு குழு மூலம் விசாரணை தொடங்கியதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கோவை: பேராசிரியர் நியமன லஞ்ச விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டே ஊழல் தடுப்பு குழு மூலம் விசாரணை தொடங்கியதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "காலிப்பணியிடமாக இருக்கும் துணைவேந்தர் பணியிடத்திற்கு உயர்கல்வி துறை செயலாளர் மூலம் குழு அமைக்கப்பட்டு எவ்வித குறைகளுமின்றி அனைத்துப் பணிகளும் நடைபெற்று வருகிறது. அனைத்து பல்கலைக்கழகங்களையும் முழுமையாக அரசு கண்காணித்து வருகிறது. பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் ஊழல் நடந்திருக்கிறது என்பது தவறான தகவலாகும். பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற ஊழல்கள் நடந்திருப்பதாகப் புகார் வந்ததாலேயே, அதனை ஆய்வு செய்ய முன்கூட்டியே குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு, அதனடிப்படையில் பாரதியார் பல்கலைக்கழக முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. 

உயர்கல்வி துறையை பொருத்தவரை மாணவர்களின் சேர்க்கை சதவீதத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதுடன், இந்திய அளவில் 25.2 என உள்ளது. தமிழகத்தில் 46.9 சதவீதமாக மாணவர்களின் சேர்க்கை மாறியுள்ளது. மாணவர்களின் கல்விக்கடன்கள் ரத்து செய்வது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...