''இடஒதுக்கீடு ரத்தானால் கிராமப் பகுதிகளுக்கு மருத்துவர்கள் இல்லாத சூழல் உருவாகும்“

அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்தாகும் பட்சத்தில், கிராம பகுதிகளுக்கு மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகும் என தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க செயலாளர் ரவிசங்கர் தெரிவித்தார்.

கோவை : அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்தாகும் பட்சத்தில், கிராம பகுதிகளுக்கு மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகும் என தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க செயலாளர் ரவிசங்கர் தெரிவித்தார்.



இது குறித்து கோவை அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவிகித இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும். இந்தாண்டு 10,000-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்காக தேர்வு எழுதி உள்ளனர். இந்த நிலையில், அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என உருவாகும்பட்சத்தில், அவர்களுக்கான பின்னடைவாக இது இருக்கும். இது தொடர்பாக அவசர சட்டத்தை அனுப்பியிருக்கும் நிலையில், அதை செயல்படுத்த மத்திய அரசை, மாநில அரசு வலியுறுத்த வேண்டும். 

தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசு மரணம் தவிர்ப்பு, கர்ப்பிணிகளின் பாதுகாப்பு போன்றவை இதுபோன்ற மருத்துவர்களால் தான் மேம்பட்டிருக்கிறது. அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்தாகும் பட்சத்தில் கிராம பகுதிகளுக்கு மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகும். இதுவெறும் அரசு மருத்துவர்கள் சார்ந்த பிரச்சனை மட்டுமல்லாது, பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கின்ற விஷயம் என்பதால் மாநில அரசு, மத்திய அரசை வற்புறுத்தி மீண்டும் தமிழகத்தில் மருத்துவ பட்டய மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...