குறுகிய காலத்தில் வேகமாய் வளரும் புதிய ரக மலைவேம்பு மரம் அறிமுகம்

குறுகிய காலத்தில் வேகமாய் வளர்ந்து அதிக மரக்கூழ் தரக்கூடிய புதிய மலைவேம்பு மர ரகத்தை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வேளாண் அறிவியலாளர்கள் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளனர்.

கோவை : குறுகிய காலத்தில் வேகமாய் வளர்ந்து அதிக மரக்கூழ் தரக்கூடிய புதிய மலைவேம்பு மர ரகத்தை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வேளாண் அறிவியலாளர்கள் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளனர். 



பிளைவுட், தீக்குச்சி, காகித உற்பத்தி என பல்வேறு பொருட்களின் தயாரிப்பிற்கு முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் மலைவேம்பின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஆனால், தேவையை ஒப்பிடும்போது, இதன் உற்பத்தி குறைவாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இயற்கையான மலைவேம்பு மரங்கள் வளர்ந்து பலன்தர பத்தாண்டுகள் வரை ஆகும் என்பதால், இதனை வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. 

இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் “மேட்டுப்பாளையம்-1” என்ற மலைவேம்பு ரகத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அறிமுகம் செய்தது. இவை ஐந்தாண்டுகளில் வளர்ந்து பலன் தரும், இவ்வகை மரங்கள் பிளைவுட் தயாரிப்பிற்கு மட்டுமே பயன்தரும். அறுவடைக்கு ஐந்து முதல் ஆறாண்டுகள் ஆகும் என்பதால் சில விவசாயிகள் மட்டுமே இம்மர வளர்ப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தற்போது மேலும் வேகமாக வளர்ந்து வெறும் பதினெட்டு மாதங்களில் அறுவடைக்கு தயாராகும் வகையிலான புதிய க்ளோனிங் ரக மலைவேம்பு மரத்தை உருவாக்கி, அதனை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்துள்ளனர் மேட்டுப்பாளையம் ஆராய்ச்சி நிலைய வேளாண் வல்லுநர்கள். “மேட்டுப்பாளையம்-2” என பெயரிடப்பட்டுள்ள இவ்வகை மரங்கள் ஒரே வருடத்தில் 12 மீட்டர் உயரத்திற்கும் 45 செ.மீட்டர் சுற்றளவும் கொண்டதாக வளர்கிறது என்பதோடு, பழைய ரகத்தை போல் பிளைவுட் தயாரிப்பிற்கு மட்டுமல்லாமல், தீக்குச்சி, காகித தயாரிப்பிற்கும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தைல மரத்தைக் காட்டிலும் அதிக காகித கூழ் மகசூலை அளிக்கின்றது. மரம் சார்ந்த தொழிற்சாலைகள் மலைவேம்பை ஒரு டன் ஒன்பதாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கும் நிலையில், இப்புதிய ரக மரங்கள் நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு ஐம்பது முதல் அறுபது டன் வரை ஒன்றரை ஆண்டுகளில் கிடைக்கும். இதனால், விவசாயிகள் குறைந்த காலத்தில் அதிக பலன் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் இப்புதிய ரக மலைவேம்பு மர வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அணுகினால், மலைவேம்பை பயிரிட வேளாண் தொழில் நுட்ப உதவி, வங்கி கடன் உதவி, மரங்களுக்கான காப்பீடு, அறுவடை முடிந்தவுடன் தொழிற்சாலைகளுக்கு நேரடி விற்பனைக்கான ஒப்பந்தம் என அனைத்து வகையிலும் உதவிகள் செய்து விவசாயிகளுக்கான வருவாய் உறுதி செய்யப்படும் என்கின்றனர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அதிகாரிகள். பல்வேறு சூழல்களின் காரணமாக வேளாண் நிலங்கள் தரிசாக கிடப்பதை தடுக்கவும், காடுகளை தாண்டி மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கவும், விவசாயிகள் உறுதியளிக்கப்பட்ட பலன் பெறவும், இது போன்ற திட்டங்கள் உதவும் என்றும் தெரிவிக்கின்றனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...