உதகை படகு இல்லத்தில் 5 மொழிகளில் தகவல் பலகைகள்

வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்காக உதகையில் முதன் முறையாக 5 மொழிகளில் தகவல் பலகைகள் படகு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி : வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்காக உதகையில் முதன் முறையாக 5 மொழிகளில் தகவல் பலகைகள் படகு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.



சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். மேலும், நீலகிரி மாவட்டம் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மாநில எல்லையோரம் இருப்பாதால் கேரள மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்தும் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.  



பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை துறை மற்றும் சுற்றுலா துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சுற்றுலா பயணிகளுக்காக முதன்முறையாக உதகை படகு இல்லத்தில் ஆங்கிலம், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, படகு இல்ல நுழைவாயில் பகுதியில் மட்டும் இந்த 5 மொழி தகவல் பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில், வரும் காலங்களில் படகு இல்லத்தில் முக்கிய பகுதிகளை குறிக்கும் தகவல் பலகைகள் வைக்கப்பட உள்ளதாக படகு இல்ல நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...