அழுகிய நிலையில் சடலம் .. எலும்புகள் விற்பனை! தொண்டு நிறுவனத்தில் விசாரணை!

காஞ்சிபுரம் அருகே அழுகிய நிலையில் இறந்த சடலத்தை மறைத்து கடத்திய தனியார் தொண்டு நிறுவனத்தில் வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட அனைத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.


காஞ்சிபுரம் அருகே அழுகிய நிலையில் இறந்த சடலத்தை மறைத்து கடத்திய தனியார் தொண்டு நிறுவனத்தில் வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட அனைத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். 

சாலவாக்கம் அடுத்த பாலேஸ்வரம் பகுதியில் ஆதரவற்ற இறக்கும் தருவாயில் உள்ள முதியோர்களைப் பராமரிக்கும் பணியை தனியார் தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. இந்நிறுவனம் மீது அடிக்கடி பல்வேறு சந்தேக புகார்களை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று எடையம்புத்தூர் காட்டு சாலை வழியாக அந்நிறுவனத்குரிய வேன் சென்றது. அப்போது, வேனிலிருந்து காப்பாற்றக் கோரி அலறல் சத்தம் கேட்டதால், அப்பகுதியினர் இருசக்கர வாகனத்தில் துரத்துச் சென்று வேனை மடக்கி பிடித்தனர். 

அந்த வேனில் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த செழியன் மற்றும் திருவள்ளூர் கூவம் பகுதியை சேர்ந்த கண்ணம்மாள் என்ற இரு முதியவர்கள் மீட்கப்பட்டனர். அப்போது, அந்த வேனில் அழுகிய நிலையில் காய்கறிகளுக்கிடையே ஆண் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது குறித்து சாலாவாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து, வேனையும், அந்த ஆண் சடலத்தையும் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து விசாரணை செய்து வரும் போலீஸார், முதல்கட்ட தகவலில் ஓட்டுநர் ராஜேஷை கைது செய்துள்ளனர். 

இதனிடையே, பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாச்சியர் ராஜூ தலைமையில் 60 மேற்பட்ட அனைத்து துறை அதிகாரிகள், அப்பகுதி மக்கள் சிலர் இன்று 11 மணியளவில் ஆய்வு மேற்கொள்ள துவங்கியுள்ளனர். இதில், அங்கு தங்கியுள்ளோரின் நிலை மற்றும் அவர்களின் விருப்பம் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவம் மற்றும் முறையான ஆவணங்கள் பற்றியும் ஆய்வு செய்யவுள்ளதாக வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். அந்த வளாகத்தில் காவல்துறை பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...