ஆன்-லைனில் பொருட்களை வாங்குவதில் தமிழகம் 4-வது இடம்

ஆன்-லைன் மூலம் பொருட்களை வாங்குவதில் தமிழகம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளதாக அமேஸான் வீட்டு உபயோகப் பொருட்களின் பிரிவுத் தலைவர் சுஜித் சுபாஷ் தெரிவித்துள்ளார்.

கோவை: ஆன்-லைன் மூலம் பொருட்களை வாங்குவதில் தமிழகம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளதாக அமேஸான் வீட்டு உபயோகப் பொருட்களின் பிரிவுத் தலைவர் சுஜித் சுபாஷ் தெரிவித்துள்ளார். 

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- சந்தை நிலவரத்தைக் காட்டிலும் குறைவான விலை, நம்பகதன்மை, உரிய நேரத்தில் டெலிவரி ஆகியவற்றால் மக்களிடையே ஆன்-லைன் மூலம் பொருட்களை வாங்க விரும்புகின்றனர். ஆண்டுதோறும் ஆன்-லைன் மூலம் பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆன்-லைனில் பொருட்கள் வாங்குவது இந்தியாவில் அதிகரித்துள்ளது. அதில், தமிழகம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

மேலும், வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் அமேஸான் மூலம் கிடைக்க பெறுவதால், எங்களது சேவையில் தமிழகம் மிக முக்கியமான மாநிலமாக இருக்கிறது. இங்கு, ஐந்து தன்னிறைவு மையங்களும், சேமிப்பு கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகப் பொருட்களில் முன்னணி நிறுவனங்களான சாம்சங், வோல்டாஸ், எல்.ஜி. மின்னனு பொருட்களை அதிகம் வாங்குகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் குளிர்சாதனப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. என்றார். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...