"பள்ளி மாணாக்கர்கள் கோவை வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்"

கோவை மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் சுற்றுலாவுடன், கோவை குறித்த வரலாற்றினை தெரிந்து கொள்வதும் அவசியம் என மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் சுற்றுலாவுடன், கோவை குறித்த வரலாற்றினை தெரிந்து கொள்வதும் அவசியம் என மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.,23) சுற்றுலாத் துறையில் சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் சுற்றுலா செல்வதற்கான வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 



அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 150 பள்ளி மாணவ, மாணவியர்களை அந்தந்த மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்துச் சென்று பார்வையிடச் செய்து, சுற்றுலாத் தலங்களின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, இன்று கோவை மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் படிப்பில் சிறந்த ஏழை மாணவ, மாணவியர்களை சுற்றுலாத் துறையுடன், கல்வித்துறையும் இணைந்து சிறப்பாக ஏற்பாடுகள் செய்துள்ளன.

இச்சுற்றுலாவில், பள்ளி மாணவ, மாணவியர்களை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஜி.டி.நாயுடு தொழில்அருங்காட்சியகம், வனத்துறை அருங்காட்சியகம், அரசு அருங்காட்சியகம் மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு, மதிய உணவு, சிற்றுண்டி, குடிநீர் மற்றும் சுற்றலாவிற்கான பேருந்து வசதிகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இச்சுற்றுலா பயணத்திற்கு மாணவ, மாணவியர்களை ஆபத்தில்லா இடங்களுக்கு அழைத்துச்செல்ல ஒவ்வொரு பேருந்திலும் ஆசிரியர்கள் பாதுகாப்பிற்காக பங்கேற்பார்கள். சுற்றுலாவின் போது மாணவ, மாணவியர்களுக்கு சுற்றுலா சார்ந்த வினாடி, வினா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும். மேலும், இவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இச்சுற்றுலாவில் தாம் பெற்ற அனுவத்தினை கருத்து படிவமாக மாணவ மாணவியர்களிடமிருந்து சேகரிக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) ராஜன், உதவி சுற்றுலா அலுவலர் சதிஷ்குமார், மண்டல மேலாளர் உதகை மண்டலம் டாக்டர் என்.கே முரளி, மாவட்ட கல்வி அலுவலர் ஜய்யண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...