குறைதீர்ப்பு கூட்டத்தில் கோரிக்கைகளை விட கைப்பேசிக்கு செவி சாய்க்கும் அதிகாரிகள்

திருப்பூரில் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் அதிகாரிகள் கைப்பேசியில் கவனம் செலுத்துவது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் அதிகாரிகள் கைப்பேசியில் கவனம் செலுத்துவது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 



திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், தாராபுரம், உடுமலை, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் வருகை தந்திருந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவி வரும் சூழ்நிலையில், ஈரோடு, கோவை மாவட்டங்களில் உள்ளதைப்போல, திருப்பூரிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போர்வெல் வாகனங்கள் வாங்கி, போர்வெல் அமைக்க உதவிட வேண்டும் எனவும், அதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் போர்வெல் அமைக்க குறைந்த செலவே ஆகும் என்றும் தெரிவித்தனர்.

அதேபோல, வெங்காயம் விலை வீழ்ச்சி உள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் எந்தெந்த வெளிநாடுகளுக்கெல்லாம் வெங்காயம் தேவைப்படுகிறதோ, அங்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.



இது மாதிரியான தங்களது கோரிக்கைகளை விவசாயிகள் அடுக்கடுக்காக முன்வைத்துக் கொண்டிருக்கும் போது, மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி குறிப்பெடுத்து அவர்களுக்கான பதிலை அளித்து வந்தார். ஆனால், விவசாயிகள் கோரிக்கையை சற்றும் செவி கொடுத்து கேட்காமல், வேளாண்மைத்துறை அதிகாரிகள் தங்களது கைப்பேசிகளில் சமூக வலைதளங்களில் தங்கள் கவனத்தை செலுத்தி வந்தனர். இதனால், விவசாயிகள் அதிருப்தியடைந்தனர். 

ஏற்கனவே ஒருமுறை இதுபோன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கைப்பேசியில் கவனம் செலுத்தியிருந்து மாவட்ட ஆட்சியர் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...