வனங்களில் தனியாக நடமாடும் யானைகளை கண்டறிவதற்கான பயிற்சி

கோவை மாவட்டத்திற்குட்பட்ட வனச்சரகத்தில் தனியாக நடமாடும் காட்டு யானைகளை அடையாளம் கண்டறியும் முறை குறித்து வனத்துறை ஊழியர்களுக்கு பயற்சி அளிக்கப்பட்டது.

கோவை : கோவை மாவட்டத்திற்குட்பட்ட வனச்சரகத்தில் தனியாக நடமாடும் காட்டு யானைகளை அடையாளம் கண்டறியும் முறை குறித்து வனத்துறை ஊழியர்களுக்கு பயற்சி அளிக்கப்பட்டது. 



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை பகுதிகளின் வனச்சரகங்களில் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் என 70-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு உலகளாவிய இயற்கைக்கான நிதியம் சார்பில் [WWF] யானைகளின் நடமாட்டத்தையும், அதன் எண்ணிக்கை மற்றும் இயல்புகள் குறித்து துல்லியமாக கண்டறிதல் குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. 

மேலும், தொடர்ந்து இடம் மாறியபடி சுற்றி வரும் யானைகளை சரியாக கணக்கிடுவது எப்படி, வேளாண் பயிர்களை உண்டு பழகியதன் காரணமாகவே மீண்டும் மீண்டும் விளைநிலங்களை நோக்கிப் படையெடுக்கும் யானைகளைக் கண்டறிதல் போன்ற பயிற்சிகளும் வனத்துறையினருக்கு அளிக்கப்பட்டது. மேலும், வனங்களில் தனியாக நடமாடும் யானைகளை, காதுகளின் வித்தியாசம், வெள்ளை படலம், கட்டிகள், புண், வடுக்கள் மற்றும் வால் ஆகியவற்றை வைத்து வகைப்படுத்துவது குறித்தும் விளக்கப்பட்டது. 

இது தொடர்பாக உலகளாவிய இயற்கைக்கான நிதியத்தைச் சேர்ந்த பூமிநாதன் பேசுகையில், ஆண் யானைகளை அடையாளப்படுத்துவது கடினமான பணியல்ல. அதன் தந்தங்களை வைத்து எளிதாக வகைப்படுத்த முடியும். ஒவ்வொரு யானைகளுக்கும் தந்தங்கள் வேறுபடும். பெண் யானைகளை அடையாளம் காண்பது சற்று கடினம். ஏனெனில், அவற்றிற்கு தந்தங்கள் கிடையாது. என்றார். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...