நீலகிரி மலை ரயிலை நிலக்கரி மூலம் இயக்க முடிவு

யுனஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயிலை மீண்டும் நிலக்கரி மூலம் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நீலகிரி: யுனஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயிலை மீண்டும் நிலக்கரி மூலம் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி மலை ரயில் இயக்கப்பட்டு வரு வருகிறது. இதில் பயணிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வரும் இந்த மலை ரயில் ஆரம்ப கட்டத்தில் நிலக்கரியினை எரித்து அதன் மூலம் உருவாகும் நீராவியின் உந்து சக்தியில் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. 



ஆனால் நிலக்கரி மூலம் இயக்குவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்த நிலையில் நிலக்கரி பயன்பாட்டை நிறுத்தி விட்டு பர்னஸ் ஆயிலை பயன்படுத்தி தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை இயக்க ஆறு எஞ்சின்கள் உள்ள நிலையில் இதில் ஒன்று மட்டுமே நிலக்கரி மூலம் இயங்கும் என்ஜினாக இருந்து வந்தது. இதுவும் கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தது, அந்த எஞ்சின் மலை ரயிலின் பழமையை பறைசாற்றும் வகையில் பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 



இந்த நிலையில், மலை ரயிலை மீண்டும் நிலக்கரி மூலம் இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தது. தொடர்ந்து, நிலக்கரி என்ஜின் மேட்டுப்பாளையம் ரயில் நிலைய பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு பழுது பார்க்கப்பட்டது. சுமார் பத்தாண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த என்ஜின் மீண்டும் இயங்கும் வகையில் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் இம்மலை ரயிலின் பெட்டிகள் 1931-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்டவையாகும். மலை ரயிலை மீண்டும் அதன் பாரம்பரிய முறைப்படி நிலக்கரியில் இயக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக இதன் பெட்டிகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் ரயில் பெட்டிகளை நிலக்கரி என்ஜின் இழுத்துச் செல்ல ஏதுவாக இதன் இரும்பு இருக்கைகள் அகற்றப்பட்டு மர இருக்கைகள் பொருத்தப்பட்டு பெட்டிகளின் எடை குறைக்கப்பட்டுள்ளது. 

பத்தாண்டுகளுக்குப் பின்னர் மலை ரயிலை மீண்டும் நிலக்கரி மூலம் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருப்பது நீலகிரி மாவட்ட மக்களை மகிழ்ச்சியடைச் செய்துள்ளது. 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...