கேரளாவில் வாலிபர் அடித்துக் கொலை : பழங்குடியின் மக்கள் சாலைமறியல்

கேரளாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வாலிபர் பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பழங்குடியின் மக்கள் இன்று அகலியில் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வாலிபர் பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பழங்குடியின் மக்கள் இன்று அகலியில் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 



 

கேரள மாநிலம், பாலக்காடு அருகே அட்டப்பாடியில் கடுகுமன்னா பகுதியில் திருடன் எனக் கூறி பழங்குடி இனத்தைச் சேர்ந்த வாலிபர் மது (27) என்ற வாலிபர் கடந்த இருதினங்களுக்கு முன்பு பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று மாலை அவரது உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, உடலைப் பெற்றுக் கொண்ட பழங்குடியின மக்கள் அகலி பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதையறிந்த, கேரளா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, பா.ஜ.க., கேரள மாநிலத் தலைவர் மற்றும் அத்தொகுதி சி.பி.எம்., எம்.எல்.ஏ.,க்கள் அவர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிடச் செய்தனர். மேலும், கேரள அரசு அறிவித்த ரூ. 10 லட்ச ரூபாய்க்கு பதிலாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த ரமேஷ் சென்னிலா, இதுபோல, ஆதிவாசியின மக்கள் கேரளத்தில் பாதிக்கப்படக்கூடாது என்றார். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...