மின்கம்பத்தில் ஏறி, இறங்க மறுத்த நபரால் பரபரப்பு

மின் கம்பத்தில் ஏறி, இறங்க மறுத்த எலக்ட்ரிசன் சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மின் கம்பத்தில் ஏறி, இறங்க மறுத்த எலக்ட்ரிசன் சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பெங்களூருவைச் சேர்ந்த எலக்ட்ரிஷன் அய்ரின் என்பவர், தனது இரண்டு குழந்தைகளுடன் பெங்களூருவில் இருந்து பொள்ளாச்சியில் உள்ள தனது மனைவியைப் பார்க்க பேருந்தில் வந்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பேருந்து வந்தபோது, உடல்நலக்குறைவு காரணமாக, சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அய்ரின் திடீரென்று தன்னைக் கொல்ல வருவதாகக் கூறி அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறி, மேட்டூர் சாலையில் ஓடியுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, போலீசாரின் பாதுகாப்பில் இருந்த அவர் திடீரென அருகில் இருந்த மின்கம்பத்தில் ஏறினார். பின்னர், அப்பகுதி மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. மேலும், தீயணைப்புதுறை வரவழைக்கப்பட்டு அவரை கீழே இறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மின்கம்பியிலேயே அய்ரின் அங்கும், இங்கும் ஓடியதால் கீழேஇறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து, இரண்டு மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்ட அவர், மீண்டும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...