அணை கட்டுவதை தடுத்து நிறுத்துங்க

கேரள அரசு சிறுவாணியின் குறுக்கே அணை கட்ட முயற்சிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோவை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: கேரள அரசு சிறுவாணியின் குறுக்கே அணை கட்ட முயற்சிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோவை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விவசாய பாசனத்திற்கும் பயன்பட்டு வருகிறது சிறுவாணி மற்றும் பவானி ஆறுகள். இந்த இரண்டு ஆறுகளுமே நமது அண்டை மாநிலமான கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திற்குள் நுழைந்து, மீண்டும் மேட்டுப்பாளையம் மலைப்பகுதியினை அடைந்து சிறுவாணி ஆறு பவானியுடன் கலந்து தமிழகத்தை வந்தடைகிறது. 

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த சிறுவாணி மற்றும் பவானி ஆற்றின் குறுக்கே அடிக்கடி அணையை கட்டி தண்ணீரினை தடுக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது கேரள அரசு. கடந்த ஆண்டு பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சு கண்டி உள்ளிட்ட நான்கு இடங்களில் சுமார் 5 அடிக்கும் மேல் தடுப்பணைகளை கட்டி தண்ணீரினை தேக்கிவைத்துள்ளது. இதனைக் கண்டித்து கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் அரசியல் கட்சியினரும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி எதிர்ப்பு தெரிவித்த போதிலும் கேரள அரசு தடுப்பணைகளை கட்டி முடித்து விட்டது.



இதனால் கடந்த ஆண்டு கோவைக்கு குடி நீர் வழங்கும் பில்லூர் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இந்த நிலையில், தற்போது கோட்டைத்துறை என்னும் இடத்தில் கேரள அரசின் சோலையூர் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் மேலும் ஒரு தடுப்பணையை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 

இது கோவை, ஈரோடு மாவட்ட விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக கோட்டத்துறை சிறுவாணி ஆற்றுப் பாலம் அருகே இடம் தேர்வு செய்து அங்கு மணல் மூட்டைகளை அடுக்கியும் ஜே.சி.பி இயந்திரங்களை கொண்டு கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல வழியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தண்ணீர் வரத்து குறைவாக உள்ள நிலையில் இந்த தடுப்பணையும் கட்டப்பட்டால் பவானி ஆற்றில் நீர் வரத்து மேலும் குறைந்து விடும். இந்த பவானி ஆற்றின் நீரினை நம்பி 15 க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வரும் நிலையில் கோடை காலத்தில் தண்ணீர் எடுப்பதில் சிக்கல் உண்டாகும். அத்துடன் மேட்டுப்பாளையம் முதல் பவானி சாகர், ஈரோடு என ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் தண்ணீர் இன்றி பலவனங்களாக மாறும் நிலை உருவாகும். எனவே தமிழக அரசும் தமிழக அரசு நிர்வாகமும் முதலமைச்சரும் உடனடியாக துரிதமாக செயல்பட்டு கேரள அரசின் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோவை மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...