திருப்பூரில் வாலிபர் மர்ம மரணம் : கொலையா..? தற்கொலையா..? என விசாரணை

திருப்பூர் - தாராபுரம் பகுதியில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மாவட்ட தெற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூர் - தாராபுரம் பகுதியில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மாவட்ட தெற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தாராபுரம் சாலையில் கரட்டாஙகாடு, தில்லை நகர் 3-வது வீதியைச் சேர்ந்த தந்தை முத்துச்சாமி மற்றும் தாயார் ருக்மணி ஆகியோரின் மகன் ரவி. இவரது தந்தை, தாய் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், ரவி தனது சகோதரி இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இவர், கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.



இந்நிலையில் நேற்று இரவு கரட்டாங்காடு மெயின் ரோடு அருகில் ரவி மர்மமான முறையில் இறந்துள்ளார். காலையில் அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர் உதவியுடன் விசாரித்து வருகின்றனர். அருகில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருவதால் மேலே இருந்து தவறி விழுந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் திருப்பூர் தெற்கு போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...