கல்லட்டி மலைப்பகுதியில் வாகனங்களை இயக்குபவர்களுக்கு போலீஸார் அறிவுரை

நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளதையொட்டி, வாகன ஓட்டிகளுக்கு வாகனங்களை எவ்வாறு இயக்குவது குறித்து காவல்துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளதையொட்டி, வாகன ஓட்டிகளுக்கு வாகனங்களை எவ்வாறு இயக்குவது குறித்து காவல்துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் அதிகமாக 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலைப்பாதை கல்லட்டி மலைப்பாதையாகும். இந்த மலைப்பாதையில் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிர் பலிகள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் இரவு 9 மணிக்கு வாகனங்கள் செல்லவும், கனரக வாகனங்கள் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இந்நிலையில், உதகையை அடுத்த மசினகுடி பகுதியில் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் திருத்தேர் விழாவை முன்னிட்டு நேற்று முதல் திருவிழா கோலாகாலமாக களைக் கட்டியுள்ளது. இதனையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் சிரமப்படாமல் இருக்க கல்லட்டி மலைப்பாதை வழியாக இரவு 9 மணிக்கு மேல் இரவு நேர போக்குவரத்திற்கு பல கட்டுப்பாடுகளுடன் மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. 



மேலும், கல்லட்டி வாகன சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வாகன ஓட்டிகளுக்கு மலைப்பாதையில் 1 மற்றும் 2-வது கியரில் தான் செல்ல வேண்டும், வழிகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது மற்றும் வழியில் யாரவது வாகனங்களை நிறுத்தினால் வாகனத்தை நிறுத்தாமல் செல்ல வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். மேலும், விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டி வரும் ஓட்டுநர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...