சண்டிகரில் தமிழக மாணவர் உயிரிழப்பு: விசாரணை நடத்தக் கோரி பெற்றோர் கோரிக்கை

சண்டிகரில் மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் முதலாமாண்டு படிக்கும் மாணவர் கிருஷ்ண பிரசாத் மர்மமான முறையில் மரணமடைந்ததாகவும் இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சண்டிகரில் மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் முதலாமாண்டு படிக்கும் மாணவர் கிருஷ்ண பிரசாத் மர்மமான முறையில் மரணமடைந்ததாகவும் இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் ராமாஸ்வரம் கோவிலில் புரோகிதராக இருக்கிறார். இவரது மூத்த மகன் கிருஷ்ணபிரசாத். சண்டிகரில் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் (pgimer)-ல் மருத்துவ மேல் படிப்பு முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கிருஷ்ணபிரசாத் அவரது அறையில் மர்மமான முறையில் இறந்ததாக அடுத்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது பெற்றோர்கள் ராமசாமி , புவனேஸ்வரி ஆகியோர் சண்டிகர் புறப்பட்டுச் சென்றனர்.

வட மாநிலங்களில் படிக்கச்செல்லும் தமிழக மருத்துவ மாணவர்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் இறப்பது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு சார்பில் எடுக்கப்படவில்லை. திருப்பூர் மருத்துவ மாணவர் சரவணன் மற்றும் சரத் பிரபு இறப்புக்குப் பின்னாவது வட இந்தியாவில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் பிரச்சனைகள் குறித்து தமிழக அரசு பேசியிருந்தால் கிருஷ்ணபிரசாத் உயிர் பிரிந்திருக்காது என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.

மர்மமான முறையில் மூன்று பேர் இறந்து பின்னும் அதற்கான காரணத்தை கண்டறிவதில் மத்திய அரசு அக்கறை எடுக்காதபோது, தமிழக அரசு, மத்திய அரசிற்கு அழுத்தம் தரவில்லை. தமிழக மருத்துவர் சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முன் வந்தால்தான் மர்ம மரணத்திற்குத் தீர்வு கிடைக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...