கேரளாவுக்கு தண்ணீர் திறந்தவிட்ட விவகாரம் : 2 ஆயிரம் விவசாயிகள் போராட்டம்

ஆழியார் அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்ததை கண்டித்து பொள்ளாச்சி பி.ஏ.பி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சி: ஆழியார் அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்ததை கண்டித்து பொள்ளாச்சி பி.ஏ.பி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டம் மூலம் திருமூர்த்தி அணையில் இருந்து ஜனவரி 31-ம் தேதியில் இருந்து முதலாம் மண்டல பாசனத்திற்கு 2 - வது சுற்று தண்ணீர் திறந்து விடபட்டு, விவசாயிகள் பாசனம் செய்து வந்தனர்.

இன்றுடன் முதல் சுற்று நிறைவடைந்து 2-ம் சுற்று தண்ணீருக்காக விவசாயிகள் காத்திருந்தனர். இந்நிலையில், பரம்பிக்குளத்தில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு சென்ற தண்ணிரை நிறுத்தி, ஆழியார் அணை மூலம் கேரளாவுக்கு, வினாடிக்கு 450 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பொள்ளாச்சியில் உள்ள பி.ஏ.பி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் மற்றும் பொங்கலூர் பகுதியில் இருந்து வந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதைக் கண்டித்தும், 2-ம் சுற்று தண்ணீரை திறந்து விட கோரியும் கோஷங்களை எழுப்பினர். 

கடும் வறட்சியில் பாசன நீரை நம்பி பயிர்கள் செய்திருந்த நிலையில் திடீரென்று 2-ம் சுற்று பாசன தண்ணீரை நிறுத்தியதால் தென்னை உள்ளிட்ட பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இனால் 2-ம் சுற்று தண்ணீர் திறக்கும் வரை போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து அலுவலக வளாகத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்ட பேச்சுவார்த்தையில் கேரளாவுக்கு திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்த முடியாது என்று பொது பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 



விவசாயிகள் தொடர் போராட்டம் காரணமாக பி.ஏ.பி திட்ட அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...