தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமே தவிர கிளர்ச்சி பாதைக்கு அல்ல - தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமே தவிர கிளர்ச்சி பாதைக்கு அல்ல என்று பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை : தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமே தவிர கிளர்ச்சி பாதைக்கு அல்ல என்று பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

கோவையில் தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- 

தாமரை யாத்திரை கடந்த வாரமே தொடங்கப்பட்டுவிட்டது. பிரதமரின் வருகையின் காரணமாக வரும் 1-ம் தேதி முதல் தாமரை யாத்திரை தமிழகம் முழுவதும் மீண்டும் துவங்க உள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தலில் கட்சியை பலப்படுத்துவதற்கும் வரும் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் கட்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் அளவு கட்சி வலுப்படுத்த இந்த யாத்திரை அமையும்.

தமிழகத்தை பொருத்த மட்டில் பா.ஜ.க., மக்களுக்கான பல்வேறு நல்ல திட்டங்களை அளித்து வருகிறது. தூத்துக்குடி துறைமுகத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடி வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த நிலையில் அமைச்சரின் வருகையை ஒரு பாடல் பிரச்சனையை வைத்து முற்றிலுமாக தமிழக அரசியல்வாதிகள் தடுக்கிறார்கள். 

ஐ.ஐ.டி நிறுவனம் ஏன் விநாயகர் பாடலை பாடினோம் என்பதற்கான விளக்கத்தை கூறியுள்ளது. இது அங்கு பயிலும் மாணவர்களின் விருப்பபடி ஏற்கனவே பழக்கத்தில் உள்ளதால் அதனாலேயே அப்பாடல் இசைக்கப்பட்டது. இந்தியையும், சமஸ்கிருதத்தை திணிப்பதற்காக மத்திய அமைச்சர் வந்தது போன்ற கருத்தை தமிழக அரசியல்வாதிகள் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். 

முந்தய காங்கிரஸ் அரசை விட தற்போதைய மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்கு வழங்கி உள்ளது. மேலும், காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க அடிப்படை வேலை நடைபெற்று வருகிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இங்குள்ளவர்கள் மொழியை வைத்து ஒரு அரசியல் அரங்கேற்ற வேண்டும் என நினைகின்றனர். தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்க ஐ.ஜ.டி நிறுவனம் கவனம் கொண்டிருக்க வேண்டும். இப்பிரச்சனையில் பா.ஜ.க., மற்றும் அமைச்சர்களின் உள்நோக்கம் என முன்னிறுத்துவது சரியல்ல.

மத்தியில் ஆளும் பா.ஜ.க தமிழ்மொழியை புறக்கணிப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளது தவறு. அவர்கள் ஆட்சியில் தமிழர்களே புறக்கணிக்கபட்டார்கள். இந்தியாவில் தொழில் துவங்குவதில் தமிழகம் ஒரு சதவீதமே ஈர்த்துள்ளது என அறிக்கை வந்துள்ளது. இதற்குக் காரணம் தொழில் முனைவோர் சட்டங்கள் இங்கு இல்லை என்பது தான் காரணம். தமிழகம் வளர்ச்சி பாதைக்கு செல்ல வேண்டுமெனில் முதல்வர் இதில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமே தவிர கிளர்ச்சி பாதைக்கு எடுத்து சென்று போராட்ட களமாக மாற்ற நினைப்பது சரியல்ல. 

கேரள அரசு சோலையூரில் மூன்றாவது தடுப்பணை கட்டும் விவகாரத்தில் எந்த மாநிலமும் வஞ்சிக்கப்பட கூடாது என்பது தான் மத்திய அரசின் நோக்கம். மேகதாதுவில் அணை கட்டும்போது அதை தடுத்து நிறுத்தியது மத்திய அரசு தான். காவிரியில் 37 கிளை நதிகள் உள்ளது அதில் உள்ள தண்ணீரை தேக்கி வைக்க நம் துணை அணையைக் கட்ட தவறிவிட்டோம். 

இவ்வாறு அவர் பேசினார். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...