அறுவை சிகிச்சை செய்தவர் மாரடைப்பால் மரணம் : தனியார் மருத்துவமனை மீது வழக்குப்பதிவு

கோவையில் கைமூட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனியார் மருத்துவமனை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


கோவை : கோவையில் கைமூட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனியார் மருத்துவமனை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (58). இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் முடிவெட்ட சலூன் கடைக்கு சென்றபோது கல் தடுக்கி கீழே விழுந்துள்ளார். அப்போது, அவரது வலது முழங்கை முட்டிக்குமேல் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அருகிலுள்ள (பிரகதி மருத்துவமனை) தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அடுத்த நாள் மாலை( 26.02.2018 அன்று ) அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது அவருக்கு மயக்க மருந்து முதுகு வழியாக செலுத்த முடியாததால் அவரிடம் சொல்லி வாய் வழியாக செலுத்தியுள்ளனர். 

பின்னர், அறுவை சிகிச்சை முடிந்து வார்டுக்கு 7 மணிக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து 8.45 மணியளவில் மூச்சுத்திண்றல் ஏற்பட்டுள்ளது. அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளனர். 20 நிமிடம் கழித்து மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக உறவினர்களிடம் தெரிவித்தனர்.  வேறொரு தனியார் மருத்துவமனையில் இருந்து இருதய சிறப்பு மருத்துவர் ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்துள்ளார். அவர் மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லி வேறு மருத்துவமனைக்கு மாற்ற அறிவுறுத்தியதை அடுத்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கும் சிகிச்சை அளிக்க மறுத்ததால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நள்ளிரவு 1.35 மணியளவில் கொண்டு வந்துள்ளனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து பிரேத பரிசோதனைக்காக உடற்கூறாய்வியல் துறைக்கு எடுத்துச்சென்றனர்.

இது குறித்து இறந்தவரின் உறவினர் கண்ணன் பேசியதாவது :- கை முறிவுக்கு வந்த பாலகிருஷ்ணனை அறுவை சிகிச்சை செய்த பின்பு நலமுடன் இருந்தவர் இரண்டுஅணி நேரத்திற்கு பிறகு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.  மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் மருத்துவமனை நிர்வாகம் அதிகளவு மயக்க மருந்து கொடுத்திருக்கலாம். மாரடைப்பு ஏற்பட்ட போது மருத்துவர்கள் இல்லாததாலும், என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரியாமல் மருத்துவர் பாலசுப்பிரமணியத்துக்கு சிகிச்சை அளித்துள்ளனர். என்றார்.

இதனிடையே, பாலகிருஷ்ணனின் இறப்புக்கு முக்கிய காரணம் மருத்துவமனையின் நிர்வாகம்தான் எனக்கூறி காந்திபுரத்திலுள்ள காட்டூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பாலகிருஷ்ணனின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய அவரது  உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.



Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...