அரசு அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

பரம்பிக்குளம் அணையிலிருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்து பொள்ளாச்சி பி.ஏ.பி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி: பரம்பிக்குளம் அணையிலிருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்து பொள்ளாச்சி பி.ஏ.பி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

பரம்பிக்குளம் அணையில் இருந்து ஆழியார் அணை வழியாக கேரளாவுக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விட பட்டுள்ளது. கேரளாவின் மிரட்டலுக்கு அஞ்சி திறந்து விடப்பட்ட தண்ணீரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டம் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டத்தில் அனைத்துக் கட்சி கூட்டமைப்பின் ஈடுபட்டனர். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேரளாவிற்கு திறந்துவிட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு பூட்டு போட சென்றனர், அப்போது காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கே பாசன தண்ணீர் இல்லாத நிலையில் கேரளாவில் சில கட்சியினர் நடத்திய போராட்டங்களுக்கு அஞ்சி கோவை மாவட்ட ஆளுக்கட்சி அமைச்சரின் வாய்மொழி உத்தரவு படி கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும் என்றும், உடனடியாக கேரளாவிற்கு செல்லும் தண்ணீரை நிறுத்தாவிட்டால் எல்லைகளை மூடும் போராட்டத்தில் நடத்தப்படும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...