பழங்குடியின இளைஞர் கொல்லப்பட்டத்தை கண்டித்து நீதிமன்றத்தில் கோஷமிட்ட மாவோயிஸ்ட்டால் பரபரப்பு

கேரளாவில் உணவுப் பொருள் திருடியதாக பழங்குடியின இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மாவோயிஸ்ட் கோஷம் எழுப்பியதால் கோவை நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : கேரளாவில் உணவுப் பொருள் திருடியதாக பழங்குடியின இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மாவோயிஸ்ட் கோஷம் எழுப்பியதால் கோவை நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 4-ம் தேதி மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஷ் (40), அவரது மனைவி ஷைனி (35), அனூப் மேத்யூ(40), கண்ணன்(40), வீரமணி(42) ஆகியோரை கியூபிரிவு போலீசார் கைது செய்தனர். தேசதுரோகம், கூட்டுச்சதி, தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உறுப்பினராக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் கைது செய்து கோவை மத்திய சிறையில் ஐவரையும் அடைத்தனர். இதில், ரூபேஷ் மட்டும் கேரள மாநிலம் திருசூர் சிறைக்கு மாற்றப்பட்டார் .ஷைனி, அனூப் மேத்யூ, கண்ணன், வீரமணி ஆகியோர் கோவை மத்திய சிறையில் உள்ளனர். 

இவர்கள் 5 பேர் மீதான வழக்கு விசாரணை, கோவை மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. இதற்காக, கேரள மாநிலம் திருசூரில் இருந்து மாவோயிஸ்ட் ரூபேஷ், கோவை நீதிமன்றத்துக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் நுழைந்ததும், கேரளாவில் பசிக்காக திருடிய பழங்குடியினத்தை சேர்ந்த மது என்பவரை அடித்து கொலை செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டார். இதனால், நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலையில் ரூபேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஷைனி, அனூப்மேத்யூ, கண்ணன், வீரமணி ஆகியோர் கோவை சிறையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்குப் பின்பு வழக்கினை வரும் 14ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. பலத்த பாதுகாப்புடன் ரூபேஷை போலீசார் மீண்டும் கேரளாவிற்கு அழைத்து சென்றனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...