மகளிர் தினத்தையொட்டி 8-ம் தேதி மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம்

கோவையில் மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் 8-ம் தேதி மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை: கோவையில் மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் 8-ம் தேதி மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அறிவுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:- கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறையில் வேலை வாய்ப்பு அளிப்போர், வேலை தேடுபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் முகாம் நடைபெற்று வருகிறது. இம்மாதம் மட்டும் இரண்டாவது வெள்ளிக்கிழமை நடைபெறாமல், அதற்குப் பதிலாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் 8-ம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4.00 வரை சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில், 10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அனைத்து இளங்கலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், ஐடிஐ படிப்பு பயின்று சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்கள் என அனைத்து கல்வித் தகுதி உடையப் பெண்களுக்கு சிறப்பு நேர்காணல் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாம் முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளது, இதன்மூலம் வேலைபெறும் பெண்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும், இப்பெண்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து மகளிரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, என்றார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...