பறவைகள், பட்டாம்பூச்சிகள் குறித்து அறிய முதல்முறையாக ஆண்டு கணக்கெடுப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளும் வகையில், வனத்துறையினர் ஆண்டு கணக்கெடுப்பிற்கு திட்டமிட்டுள்ளனர்.

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளும் வகையில், வனத்துறையினர் ஆண்டு கணக்கெடுப்பிற்கு திட்டமிட்டுள்ளனர். 

கோவை வனச்சரகத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம், கோவை, போளுவாம்பட்டி மற்றும் மதுக்கரை உள்ளிட்ட வனப்பகுதிகளில் பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் குறித்து அறிவதற்கான கணக்கெடுப்பை நடத்த கோவை வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி நாளை முதல் தொடங்கும் இந்த கணக்கெடுப்பில்,  பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளின் இனங்கள் மற்றும் எண்ணிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளன. 

இந்தக் கணக்கெடுப்பு பணிகளில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள உள்ளனர். இதற்கென, 7 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒரு ஒருங்கிணைப்பாளர் 4 குழுக்களை மேற்பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கோவையில் முதல்முறையாக நடத்தப்படும் ஆண்டு கணக்கெடுப்பில், உள்ளூர் பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சி இனங்களையும் கணக்கெடுக்கின்றனர்.  

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...