உதகை ரோஜா பூங்காவில் துளிர்விடும் ரோஜா மலர்கள்

நீலகிரி மாவட்டத்தில் உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில், நடவு செய்யப்பட்ட ரோஜா செடிகளில் மலர்கள் பூக்கத் துவங்கியுள்ளன.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில், நடவு செய்யப்பட்ட ரோஜா செடிகளில் மலர்கள் பூக்கத் துவங்கியுள்ளன.



இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா போன்ற சுற்றுலா தலங்களில் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதற்காக, பல்வேறு வகையிலான ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.

உதகைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 27 ஆயிரம் செடிகளில் வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் போன்ற வண்ணங்களில் 4 ஆயிரம் ரகங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஜா மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, ரோஜா பூங்காவின் ஒவ்வொரு பகுதியாக ரோஜா மலர்கள் பூக்க துவங்கியுள்ளது. இது உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் வண்ணம் உள்ளது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...