அரசின் தாய்சேய் நல சிறப்பு முகாமில் பயனடைந்த கர்ப்பிணி பெண்கள்

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசின் சார்பில் நடைபெற்ற தாய்சேய் நல சிறப்பு முகாமில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் அரசின் சார்பில் நடைபெற்ற தாய்சேய் நல சிறப்பு முகாமில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

தமிழக அரசின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் தாய்சேய் நல சிறப்பு முகாம் வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட துறையின் துணை சுகாதார துறை இயக்குநர் பானுமதி தலைமையில் நடந்த இந்த சிறப்பு முகாமை, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார். இம்முகாமில் மகப்பேறு சிறப்பு மருத்துவர் ஜனனி கர்ப்பகால பரிசோதனையும், ஸ்கேன் பரிசோதனையும் செய்து ஆலோசனைகள் வழங்கினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாம் ஏற்பாட்டினை வால்பாறை வட்டார மருத்துவ அலுவலர் வு.பிரவீன் மற்றும் சுகாதார பணியாளர்கள் செய்தனர்.

முகாமில் 130 கர்ப்பிணி தாய்மார்களும், 65 பாலூட்டும் தாய்மார்களும், 58 குழந்தைகளும் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். முகாமில் கலந்து கொண்ட கர்ப்பிணி தாய்மார்கள் அனைவருக்கும் சிறப்பான மதிய உணவு வழங்கப்பட்டது. வால்பாறையில் இம்முகாமினை சிறந்த முறையில் ஏற்பாடு செய்ததாகவும், இது தங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்ததாகவும் கர்ப்பிணி தாய்மார்கள் தெரிவித்தனர். இதில், வால்பாறை நகர செயலாளர் மயில்கணேசன், அண்ணா தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் அமீது, மிச்சர்கடை முருகன், வழக்கறிஞர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...