ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் 14 ஆண்டுகளுக்கு பின் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

கோவை: ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் 14 ஆண்டுகளுக்கு பின் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவிலில் மிகவும் முக்கியமானது அன்னூரில் உள்ள 1000 ஆண்டுகள் பழைமையான மண்ணீஸ்வரர் ஆலயம். 

மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படும் பிரம்மா மற்றும் மார்க்கண்டேய முனிவர், வியாசகர் உள்ளிட்டவர்கள் இந்த சிவ ஆலயத்தில் வழிபாடு நடத்தியதாக வரலாறு உள்ளது.

பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தில் அறநிலையத்துறையின் சார்பில் சுமார் இரண்டு கோடி செலவில் ராஜகோபுர புணரமைப்பு மற்றும் வசந்த மண்டபம், நாயண்மார்கள் பிரதிஷ்டை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து, 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.



கணபதி ஹோமத்துடன் துவங்கி ஜந்துகால பூஜைகள் நடத்தபட்டு ராஜகோபுரத்திற்கும் மண்ணீஸ்வரர் மற்றும் அருந்ததட்செல்வி தாயாருக்கும் புனித நீர் ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் சிவாச்சாரியர்கள் வேத யந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடத்தபட்டு புனித நீர் பொதுமக்களுக்கு தெளிக்கபட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு மண்ணீஸ்வரர் அருள்பெற்றனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...