திரிபுராவில் அதிகாரம் மற்றும் பண பலத்தை பயன்படுத்தி பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது - முத்தரசன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியமல்ல என்ற நீர்வளத்துறை மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை மீண்டும் சந்திப்பது பயனற்றது என்றும், திரிபுராவில் அதிகாரம் மற்றும் பண பலத்தை பயன்படுத்தி பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.


கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியமல்ல என்ற நீர்வளத்துறை மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை மீண்டும் சந்திப்பது பயனற்றது என்றும், திரிபுராவில் அதிகாரம் மற்றும் பண பலத்தை பயன்படுத்தி பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மாநாடு வடகோவை பகுதியில் நடைபெற்று வருகிறது.

இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், "காவிரி நதிநீர் பிரச்சனையில் மோடி தலைமையிலான மத்திய அரசு துரோகம் இழைத்து வரும் வகையில் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தது. 

மத்திய அரசு கர்நாடக தேர்தலில் அரசியல் ஆதயாத்திற்காக நடுநிலையாக இல்லாமல், குறுகிய நோக்குடன் செயல்பட்டு வருகிறது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியமல்ல என்ற நீர்வளத்துறை மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை மீண்டும் சந்திப்பது பயனற்றது. எனவே, மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி மத்திய அரசிற்கு அரசியல் நெருக்கடி தரும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். தொடர் கடையடைப்பு, மத்திய அரசு அலுவலகங்கள் முடக்கம் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 

காவிரி பிரச்சனையில் மத்திய அரசு அரசியல் செய்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை எனில், தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும்.

திரிபுராவில் ஆட்சி அதிகாரம், பண, படை பலம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. பிரிவினைவாதத்திற்கு எதிராக பேசும் மோடி, திரிபுராவில் வெட்கமற்ற முறையில் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து வெற்றி பெற்றுள்ளார். மேலும், கம்யூனிசத்தை ஒரு போதும் அழிக்க முடியாது. திரிபுரா மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விருப்பம்.

எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படாத அரசாக உள்ளது. மக்கள் ஆதரவையும், தங்களது சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் இழந்து விட்டது." என்றார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...