பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டி: 272 பேர் பங்கேற்பு

பொள்ளாச்சி தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 272 வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கோவை: பொள்ளாச்சி தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 272 வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பொள்ளாச்சி தனியார் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் போட்டியில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இருந்தும் கேரள மற்றும் கர்நாடகாவில் இருந்தும் 272 பேர் பங்கேற்றனர்.



எடை வாரியாக நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றவர்கள் தங்களது திறமைகளை மேடையில் அரங்கேற்றினர். 55 கிலோ எடை வரை ஒரு பிரிவாகவும், 55 முதல் 65 கிலோ எடை, 65 முதல் 75 கிலோ எடை, 75 முதல் 85 கிலோ எடை, 85 க்கும் மேல் என்று பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. 

இந்த பிரிவுகளில் முதல் இடம் பிடித்த ஆணகழனுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கமும், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம் ரொக்கமும், மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு கேடயமும் வழங்கப்பட்டது.

அனைத்துப் பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு ஓப்பன் கேட்டகிரி போட்டி நடத்தப்பட்டது. அதில் முதல் பரிசு பெற்றவருக்கு இருசக்கர வாகனமும், இரண்டாம் பரிசு பெற்றவருக்கு குளிர்சாதன பெட்டியும் வழங்கப்பட்டது. 

இந்த மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் பூனேவில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.

பொள்ளாச்சியில் முதன் முறையாக ஆணழகன் போட்டி நடைபெற்றதால் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியைக் கண்டு ரசித்தனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...