கோவையில் போலி பத்திரிக்கையாளர்களைப் பிடிக்க உத்தரவு

வாகனங்களில் "பிரஸ்" என்ற ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு உலாவரும் போலி பத்திரிக்கையாளர்களைப் பிடிக்க கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: வாகனங்களில் "பிரஸ்" என்ற ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு உலாவரும் போலி பத்திரிக்கையாளர்களைப் பிடிக்க கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

செய்தியாளராகப் பணி புரியும் ஒருவர் பணி நிமித்தமாக நாள்தோறும் பல்வேறு இடங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் செல்ல நேரிடும். இதனைக் கருத்தில் கொண்டு செய்தியாளர்கள் வாகனங்களில் "பிரஸ்" (PRESS) என்ற ஸ்டிக்கரை பொருத்தியுள்ளனர். இதன் மூலம், குறித்த நேரத்திற்குள், குறித்த இடத்திற்கு பத்திரிக்கையாளர்களால் செல்ல முடிகிறது.

ஆனால், பத்திரிக்கையாளர்கள் அல்லாத சிலரும் அவர்களது வாகனங்களில் "பிரஸ்" என்ற ஸ்டிக்கர்களை ஒட்டியிருப்பதாகப் புகார்கள் எழுந்தன. அவ்வாறு, போலியாக பிரஸ் ஸ்டிக்கரை ஒட்டியிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்தது, போலியாக பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளவர்களைப் பிடிக்க மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். நேற்று வழங்கப்பட்ட இந்த உத்தரவின் அடிப்படையில் போக்குவரத்து போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசு முத்திரையுடன் வழங்கப்பட்ட பிரஸ் ஸ்டிக்கர்களைப் போல போலியாக பிரஸ் ஸ்டிக்கர்களை தயாரித்து வாகனங்களில் ஒட்டியுள்ள போலி பத்திரிகையாளர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதே போல் சமீபத்தில் சென்னை மற்றும் சேலத்தில் போலி பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...