ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தலா...? ஆதாரங்களை வைத்து அச்சுறுத்தும் பீட்டா

இந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை திரட்டி, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் முறையிட பீட்டா அமைப்பு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை திரட்டி, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் முறையிட பீட்டா அமைப்பு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பீட்டா விதிக்கப்பட்ட தடையால் கடந்த சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தமிழர்களின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பொருட்டு, இளைஞர்களின் ஆர்ப்பாட்டம், அதனால் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்களால் ஜல்லிக்கட்டு மீண்டும் தமிழகத்தில் தலைதூக்கியது. இதனால், பல்வேறு தடைகளுக்கு பிறகு தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு சீறும், சிறப்புமாக நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் முதல் குக்கிராமங்கள் வரையிலும் ஜல்லிக்கட்டுப் போட்டி களைகட்டியது. இருப்பினும், பீட்டா அமைப்பினர், தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் கலந்து கொண்டு காளைகள் துன்புறுத்தப்படுகின்றனவா..? என்ற ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டது. 

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 9 இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில், காளைகள் துன்புறுத்தப்படுவதற்கான ஆதாரங்களை பீட்டா திரட்டியுள்ளது. இதுவரை காளைகள் துன்புறுத்தப்படும் வீடியோக்கள் அடங்கிய 131 பக்கங்கள் கொண்ட ஆதாரங்களை பீட்டா வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆதாரங்கள் அனைத்தையும், உச்சநீதிமன்றத்தில் சமர்பித்து, மீண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடைபெறப் போவதாக பீட்டா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பீட்டாவின் இந்த நடவடிக்கை தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...