ஏர்செல்லை தொடர்ந்து பிற தொலைதொடர்பு சேவைகளிலும் கோளாறு: பொதுமக்கள் அவதி

தமிழகத்தில் ஏர்செல்லின் சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில், பிற தொலைதொடர்பு சேவைகளிலும் கோளாறு ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் ஏர்செல்லின் சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில், பிற தொலைதொடர்பு சேவைகளிலும் கோளாறு ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தென் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல் சேவை, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த பாதிப்பு இருந்து வந்த நிலையில், தற்போது முழுவதுமாக முடங்கியது. இதனால், வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். வங்கிக் கணக்கு, சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றுக்கு ஏர்செல் எண்ணைக் கொடுத்து வைத்திருந்தவர்கள் இன்னலுக்கு உள்ளாகினர். எனவே, ஏர்செல் நிறுவன அலுவலகங்களை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, ஏர்செல் நிறுவனத்தின் சேவை மீண்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இருக்கும் தடம் தெரியாத அளவிற்கு சேவைகள் முடங்கியுள்ளது. இதனால், ஏர்செல் வாடிக்கையாளர்கள், பி.எஸ்.என்.எல், ஏர்டெல், வோடபோன், ஜியோ போன்ற பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர். அதற்கு, ஏற்றாற்போல, மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களும் பல்வேறு அதிரடி சலுகைகளை வழங்கி வருகின்றனர். தங்களது சேவையை மாற்றிக் கொண்ட ஏர்செல் வாடிக்கையாளர்கள் சற்று நிம்மதியடைந்தனர். ஆனால், இது நீடிக்கவில்லை.

கடந்த ஓரிரு நாட்களாக, பிற தொலைதொடர்பு சேவைகளிலும் கோளாறு ஏற்பட்டு வருகிறது. செல்போன் உபயோகத்தில் இருக்கும் போதே, அனைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாகவும் பதில் வருகிறது. சில நேரங்களில் எந்தவிதமான பதிலும் இன்றி அழைப்பு துண்டிக்கப்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களும் கலக்கத்தில் உள்ளனர். மேலும், ஏர்செல்லை தொடர்ந்து, பிற சேவைகளும் இதுபோன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், சீரான தொலைதொடர்பு சேவை எது எனத் தேடும் சூழலுக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், நாகரீகமான இந்தக் காலகட்டத்தில், செல்போன் எண்ணை வைத்தே ஆம்புலன்ஸ் சேவை, சமையல் எரிவாயு புக்கிங், வங்கிக் கணக்கு, ஆன்லைன் கேப்ஸ், ஆன்லைன் வணிகம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே செய்கின்றனர். அத்தியாவசியமாகிய மாறியுள்ள தொலைதொடர்பு சேவை, ரத்தாவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...