பணியிழப்பு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஏர்செல் ஊழியர்கள் போராட்டம்

திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ள ஏர்செல் நிறுவனம், உரிய பணியிழப்பு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் அதன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ள ஏர்செல் நிறுவனம், உரிய பணியிழப்பு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் அதன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் சுமார் 8 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம் சமீபகாலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்தது. தங்கள் நிறுவனத்தின் டவர்கள் இல்லாத பகுதியில் வாழும் சந்தாதாரர்களுக்கு தொலைத்தொடர்பு இணைப்பு வழங்கிவந்த வோடாபோன், ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் செலுத்த வேண்டிய பாக்கி தொகையை செலுத்தாதால் ஏர்செல்லுக்கு அளித்துவந்த மாற்று வசதியை அந்நிறுவனங்கள் நிறுத்தி விட்டன. இதனால், தமிழகம் உள்ளிட்ட நாட்டின் சில மாநிலங்களில் வாழும் ஏர்செல் சந்தாதாரர்கள் சமீபத்தில் கடும் அவதிக்குள்ளாகினர். 

இதனிடையே, தங்களை திவால் ஆன நிறுவனமாக அறிவிக்க வேண்டும் என தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம் மனு செய்துள்ளது. இந்த மனு நாளை (மார்ச் 07) விசாரணைக்கு வர இருக்கிறது. 

இந்த நிலையில், கோவை மாவட்டம் ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள ஏர்செல் தமிழக தலைமை அலுவலகத்தில் அதன் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது, அவர்கள் கூறியதாவது, எந்தவித முன்னறிவிப்பின்றி ஏர்செல் நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கக்கோரி தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். நிறுவனத்தின் நிலைமை குறித்து எந்த விவரமும் ஊழியர்களுக்கு தெரிவிக்காமல், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றே கூறி வருகின்றனர். ஆனால், ஏர்செல்லின் இந்த நடவடிக்கையால் சுமார் 30,000 ஊழியர்கள் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். 

எனவே, நீண்ட காலமாக பணியில் இருந்த ஊழியர்கள், ஒப்பந்தம் அடிப்படையில் வேலை செய்த பணியாளர்களுக்கு பணியிழப்பு நிவாரணம் வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ., பிஃஎப் போன்ற பிடித்தத் தொகைகளை வழங்க வேண்டும். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...