மகளிர் வியாபாரிகளுக்கு பாரம்பரிய உணவு தயாரிப்பு பயிற்சி

உதகையில் உள்ள மகளிர் மேம்பாட்டு வணிக வளாகத்தில், தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் மகளிர் வியாபாரிகளுக்கு பாரம்பரிய உணவு தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட்டது.

நீலகிரி: உதகையில் உள்ள மகளிர் மேம்பாட்டு வணிக வளாகத்தில், தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் மகளிர் வியாபாரிகளுக்கு பாரம்பரிய உணவு தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட்டது.



இந்த பயிற்சியில், பாரம்பரிய உணவுகளான சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு, வரகு ஆகியவற்றைக் கொண்டு, சாமை எலுமிச்சை சாதம், வரகு பிரியாணி, சாமை தக்காளி சாதம், திணை சாம்பார் சாதம், முளைகட்டிய பயிர்களின் குருமா, நவதானிய குருமா, குதிரைவாலி பொங்கல் ஆகிய உணவுகளை தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

"இத்தகைய சிறு தானியங்களைக் கொண்டு உணவு வகைகளைத் தயாரிப்பதன் மூலம் சுற்றுலா பயணிகளை கவருவதுடன், அவர்களுக்கு நமது பாரம்பரிய உணவு பழக்கத்தை புதுப்பிக்க முடியும்" என பயிற்சியாளர்கள் தெரிவித்தனர். 



தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன பயிற்சியாளர் ரெக்ஸ் வாஸ் கூறும் போது, "மகளிர் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் சிறு, குறு வியாபாரம் செய்யும் மகளிருக்கு பாரம்பரிய உணவு பற்றிய விழிப்புணர்வு மற்றும் செய்முறை பயிற்சி கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது.

இதில், பங்கேற்றவர்களில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ‘பாரம்பரிய உணவு தயாரிப்பு பயிற்சி’ வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் மகளிருக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் பங்கேற்றவர்கள் மகளிர் தின விழாவில் பாரம்பரிய உணவகத்தை நடத்தவுள்ளனர்.’ என்றார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...