கடன் பத்திரங்களை திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாகப் புகார் : வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள்

நீதிமன்ற உத்தரவின் படி விவசாயிக்குக் கடன் பத்திரங்களை திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாகக் கூறி பல்லடம் பகுதி விவசாயிகள் கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையை முற்றுகையிட்டனர்.

திருப்பூர்: நீதிமன்ற உத்தரவின் படி விவசாயிக்குக் கடன் பத்திரங்களை திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாகக் கூறி பல்லடம் பகுதி விவசாயிகள் கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையை முற்றுகையிட்டனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் வாவிபாளையம் செல்லாந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ரத்தினசாமி(46). இவர் கடந்த 2002-ம் ஆண்டு கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கிக்கிளையில் பயிர்க்கடன் பெற்றுள்ளார். 

போதிய மழையின்மை, வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயி ரத்தினசாமி அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்து வங்கிக் கிளை நிர்வாகம் திருப்பூர் சார்பு நீதிமன்றத்தில் கடன் குறித்து வழக்கு ஒன்றை தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், விவசாயி ரத்தினசாமிக்கு ஆதரவாக கடனை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்ததாகவும் கூறப்படுகிறது. 

மேலும், கடன் தொகைக்கான ஆவணங்களையும் விவசாயிடம் திருப்பித் தருமாறு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ரத்தினசாமி பலமுறை வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோதும் ஆவணங்களை திர்ப்பித் தராமல் காலதாமதம் செய்தும் அலைக்கழித்துள்ளனர். 

இதனால், உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து தலைமையில் வங்கிக்கிளை அருகே திரண்ட விவசாயிகள் திடீர் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக பத்திரங்களைத் தரவேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஒட்டுமொத்த விவசாயிகளைத் திரட்டி மறியல் உள்ளிட்ட பல கட்டப் போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காமநாயக்கன்பாளையம் சம்பவ இடத்திற்குச் சென்று இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து ஆவணங்களை உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என வங்கி அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...