பெட்ரோல் குண்டு வீசிய மூன்று பேருக்கு 23-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு வரும் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு வரும் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

கோவை சித்தாப்புதூர் வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகம் மீது நேற்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். 

இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகியிருந்ததையடுத்து, அக்காட்சிகளைக் கொண்டு காட்டூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். முதல்கட்டமாக பெட்ரோல் குண்டு வீசியவர்கள் தந்தை பெரியார் திராவிடர் கழக அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

இந்நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் உறுப்பினரான கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலன் என்பவர் காவல்நிலையத்தில் சரணடைய வந்தபோது வழியிலேயே காவல்துறையினர் பிடித்து கைது செய்தனர். 

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சிங்காநல்லூரை சேர்ந்த தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் மாநகர் அமைப்பாளரான ஜீவானந்தம், ஜீவானந்தத்தின் நண்பரும் தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் உறுப்பினருமான கவுதம் என்பவரும் சம்பவத்தில் தொடர்பிருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து, ஜீவானந்தத்தை சின்னதடாகம் அருகில் கைது செய்தனர். 

கவுதம் வழக்கறிஞர்களுடன் சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் சரணடைந்தார். சொத்துக்களை சேதப்படுத்துவது, ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தீவைப்பது, இரு பிரிவினருக்கிடையே பகை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது என இந்திய தண்டனைச் சட்டங்கள் 427, 285, 153A ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மூவரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள நீதிபதி குடியிருப்பில் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜ்குமாரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். மூவரையும் வரும் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

தொடர்ந்து, அவர்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில், காந்திபுரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...