விமான நிலையத்தில் நடனமாடி மகளிர் தினத்தை கொண்டாடிய பெண் விமானிகள்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கோவை விமான நிலையத்தில் விமானப் பணி பெண்கள் பயணிகளுடன் நடனமாடிய நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.


கோவை : சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கோவை விமான நிலையத்தில் விமானப் பணி பெண்கள் பயணிகளுடன் நடனமாடிய நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெண்களுக்காக சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில்,  மகளிர் தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, விமான நிலையத்திற்கு வரும் பெண் பயணிகளின் வசதிக்காக 'நாப்கின் வெண்டார் மெஷின்' திறந்து வைக்கப்பட்டது. இதனை மாவட்ட பயிற்சி ஆட்சியர் சரண்யா ஹரி அறிமுகம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து, 101 வயது ஆன யோகா பாட்டி நாணம்மாள் கவுரவிக்கப்பட்டார்.

பின்னர், பயணிகளைக் குதூகலப்படுத்தும் விதமாக இண்டிகோ விமானப் பெண் ஊழியர்கள், பயணிகளுடன் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  

மகளிர் தினத்தின் முக்கிய நிகழ்வாக, 127 பயணிகளுடன் சென்னையில் இருந்து கோவை வரை இயக்கப்பட்ட ஏர் இந்தியா 539 என்ற விமானத்தைப் பெண் விமானி ரம்யா, துணை விமானி விருந்தா நாயர் ஆகியோர் இயக்கினர். அவர்களது குழுவில், ரஜனி, சைஜா, வர்ஷா, பிரியங்கா, ராஷ்மி சுரபா ஆகிய பணிப்பெண்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த விமானமானது, கோவை விமான நிலையம் வந்தடைந்த போது, கோவை விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம், ஏர் இந்தியா கோவை மண்டல மேலாளர் கிரிஜா மற்றும் அதன் ஊழியர்கள் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன்பின்னர், கேக் வெட்டி கொண்டாடி, தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...