சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வேளாண்மையில் மகளிர் - சிறப்பு கருத்தரங்கு

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வேளாண்மையில் மகளிர் கருத்தரங்கு மற்றும் மாடித்தோட்டத்தை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார்.

கோவை : சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வேளாண்மையில் மகளிர் கருத்தரங்கு மற்றும் மாடித்தோட்டத்தை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார். 



தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பாக நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாக கலையரங்கில், இந்த நிகழ்ச்சியை மீன்வளத்துறை பணியாளர் நிர்வாகம் மற்றும் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் முன்னிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று துவங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- விவசாயத்தில் பெண்களின் பங்கேற்பினை அதிகப்படுத்தும் நோக்கத்துடன், தமிழகத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம், காஞ்சிபுரம், திருவள்ளுர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மொத்தம் 10 வட்டாரங்களில் பெண் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம் என்ற திட்டம், 2016-17 முதல் 60:40 என்ற விகிதத்தில், மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரப்படுகின்றது. 2 மடங்கு உற்பத்தி 3 மடங்கு வருமானம் என்ற இலக்குடன், பெண் விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறையில் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும் விவசாயத்தில் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.166 ஊராட்சிகளில் 16,800 பெண் விவசாயிகள் கண்டறியப்பட்டு, அவர்களில் 14,800 நபர்களுக்கு இதுவரை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 

பெண்கள் அதிக அளவில் பங்குகொள்ளும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 2017-18ல் பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் மூலம், இதுவரை 21.88 கோடி மனிதசக்தி நாட்கள் உருவாக்கப்பட்டு, அதற்காக ரூ. 3,272 கோடி ஊதியமாக வழங்கி, தமிழகம் இந்திய அளவில் சாதனை படைத்து பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ், 40,000 வீடுகள் ரூ. 840 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 2016-17 மற்றும் 2017-18ம் ஆண்டுகளில், மொத்தம் 3,06,552 வீடுகள் ரூ.5,358 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகின்றன. இவ்வீடுகள் பெருமளவில் பெண்கள் பெயரிலேயே வழங்கப்படுகின்றன என்பதை நான் இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டும், நகர்ப்புறங்களிலும் காய்கறி, கீரை போன்றவற்றை உற்பத்தி செய்ய இயலும் என்பதை நிரூபிக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும் வண்ணம், இந்தியாவிலேயே மிகப்பெரிய மாடித் தோட்டத்தை, அன்னை தெரசா மகளிர் வளாக கட்டிடத்தின் மேற்பரப்பில், மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அமைத்துள்ளது. இது அனைவரின் பாராட்டுதலையும் பெற்று, மாடித் தோட்டம் அமைக்க அனைவருக்கும் ஓர் உந்து சக்தியாகத் திகழ்கிறது. 120 பெண்களுக்கு மாடித்தோட்டம் அமைத்தல் குறித்து பயிற்சி வழங்கப்பட்டு, முதன்மை பெண் பயிற்றுநர்களாக அவர்கள் மாநில / மாவட்ட அளவில் செயல்பட்டு வருகின்றனர். இதனைப் பின்பற்றி, தூத்துக்குடி ஆணையர் அலுவலகம், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றின் மேற்பரப்பிலும் மாடித்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

மேலும், பெண்களுக்கான மகளிர் சுய உதவிக் குழுக்கள், மானிய விலையில் இருசக்கர வாகனத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பற்றியும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விளக்கினார். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...