குட்டை நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உட்பட இருவர் பலி

பல்லடம் அருகே ஆறாக்குளம் குட்டையில் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: பல்லடம் அருகே ஆறாக்குளம் குட்டையில் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். அப்பகுதியிலுள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவரது நண்பர் மூவேந்தர்.

இந்நிலையில், நேற்று அவர்கள் இருவரும் விளையாடுவதற்காகச் சென்றனர். ஆனால், மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் இருவரையும் தேடி கொண்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து, பல்லடம் அருகேயுள்ள ஆறாக்குளம் குட்டையில் இன்று காலை இருவரின் சடலம் மிதப்பதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற, பல்லடம் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இருவரது சடலங்களையும் மீட்டனர்.



விசாரணையில் இறந்தது பள்ளி மாணவர் ஜெயபிரகாஷ், மற்றும் அவரது நண்பர் மூவேந்தர் என்பது தெரிய வந்தது.

மாணவர்கள் மீன்பிடிக்கச் சென்ற போது நீச்சல் தெரியாமல் குட்டையில் விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். குட்டையில் மூழ்கி இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...