தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும்: மாணவர்கள் எச்சரிக்கை

திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெரியார் சிலை இடிக்கப்படும், என்ற பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவைக் கண்டித்தும் தஞ்சையில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்: திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெரியார் சிலை இடிக்கப்படும், என்ற பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவைக் கண்டித்தும் தஞ்சையில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்த கையேடு அம்மாநிலத்தில் இருந்த லெனின் சிலை இடித்து அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு தமிழகம் முழுவது எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அந்த பதிவை நீக்கினார். 

இந்த நிலையில் பா.ஜ.க. அரசின் இந்தப் போக்கை கண்டித்து தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஊர்வலமாகச் சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கண்டனங்களை தெரிவித்தனர்.



காவல்துறை அனுமதியை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் எச்.ராஜாவை கைது செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும் என்று எச்சரித்தனர்.



Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...