அரசின் சார்பில் உண்டு, உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பின்தங்கிய பழங்குடியினருக்கான உண்டு, உறைவிடப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்கியது.

நீலகிரி: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பின்தங்கிய பழங்குடியினருக்கான உண்டு, உறைவிடப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்கியது. 



நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்த இந்த சுற்றுலா பயணத்தில் கரிக்கையூர், குஞ்சப்பண்ணை, புத்தூர் வயல், பொண்ணூர், நடுவட்டம், கார்குடி உண்டு உறைவிட பள்ளிகளில் படிக்கும் 150 மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். பின்தங்கிய பகுதிகளில் வாழும் இந்த மாணவர்களுக்கு இயற்கையைப் பாதுகாப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது, சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைப்பது மற்றும் கழிவறைகளை பயன்படுத்துவது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

இந்த ஒருநாள் சுற்றுலாவின் போது உதகையிலுள்ள அருங்காட்சியகம், ஆளுநர் மாளிகை, தாவரவியல் பூங்கா, பழமை வாய்ந்த கட்டிடங்கள் மற்றும் வானியல் ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட உள்ளனர். இதுபோன்ற திட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படுவதாகவும், நீலகிரி மாவட்டத்திற்காக ரூ. 2 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் முரளி தெரிவித்தார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...