கோவை அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் அரசு முதன்மைச் செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஹர்மந்தர்சிங் தலைமையில் நடைபெற்றது.

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் அரசு முதன்மைச் செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஹர்மந்தர்சிங் தலைமையில் நடைபெற்றது.



 

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் அரசு முதன்மை செயலாளர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்ததாவது :- கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை பேணும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து, தண்ணீர், தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுதல், குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பணி மேற்கொள்ள வேண்டும். தெருக்களில் உள்ள குப்பைத்தொட்டிகள் பழுதடைந்து இருந்தால் புதிதாக மாற்றி தெருக்களில் குப்பைகள் சேராமல் உடனுக்குடன் அப்புறப்படுத்தவேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தாங்கள் சார்ந்த பகுதிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த அலுவலர்கள் மூலம் அறிவுறுத்த வேண்டும். மேலும், கோவை மாவட்டத்தில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால் கோடை காலத்திலும் கூட ஊரக மற்றும் மாநகர பகுதிகளில் போதிய அளவில் குடிநீர் வழங்க இயலும்.

நெடுஞ்சாலைத்துறையின் மூலம், முடியும் தருவாயில் உள்ள சாலைப்பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். மேலும், நெடுஞ்சாலைகளில் குறைவாக உள்ள குப்பைத்தொட்டிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படவேண்டும், மேலும், தற்பொழுது நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை விரைந்து முடித்து, அதன் தற்போதைய நிலைகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாயிலாக உடனடியாக அறிக்கை தெரிவிக்க வேண்டும். அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரடியாக எந்த வித சிரமமும் இன்றி உரிய நேரத்தில் சென்றடைய அனைத்துத்துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும். இவ்வாறு கூறினார். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...