உதகையில் மானிய விலை இருசக்கர வாகனம் வழங்கினார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புக்கான ஆணையை உதகையில் இன்று அமைச்சர் எச்.பி.வேலுமணி வழங்கினார்.

நீலகிரி: மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புக்கான ஆணையை உதகையில் இன்று அமைச்சர் எச்.பி.வேலுமணி வழங்கினார்.

தமிழக அரசின் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று நீலகிரி மாவட்டத்தில் இரு சக்கர வாகனம் வழங்கும் விழா உதகையில் உள்ள பழங்குடியினர் கலாச்சார மையத்தில் இன்று நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி 154 பயனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்களை வழங்கினார். 



தொடர்ந்து அவர் பேசுகையில், “நீலகிரி மாவட்டத்தில் 1074 பயனாளிகளுக்கு இரு சக்கர வாகனத்திற்கான மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 154 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.” என்றார்.

இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உதகை அருகேயுள்ள கேத்தி பிரகாஷபுரத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.18.86 கோடி செலவில் 127 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளது. கேத்தி பகுதியில் ரூ.19.71 கோடி மதிப்பில் 150 குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தில், 3650 வீடுகள் ரூ.113.47 கோடி மதிப்பில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது தொடர்ந்து கேத்தி பிரகாஷபுரத்திற்கு சென்ற அவர், குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டினர். 

பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தலின் போது அறிவித்த இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் இன்று (நேற்று) துவக்கி வைக்கப்பட்டது. வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் 100 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 110 விதியின் கீழ் அறிவித்த அனைத்து திட்டங்களும் உள்ளாட்சி துறை சார்பில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசு வழங்க கூடிய திட்டத்தின் கீழ் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு இந்தியாவில் முதன் மாநிலமாக உள்ளது. இந்தியாவில் குழாய்கள் மூலம் அனைத்து குடியிருப்புகளுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதிலும் தமிழகம் தான் முதல் மாநிலமாக உள்ளது. மகளிர் குழுக்களுக்கு ரூ.44 ஆயிரம் கோடி வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத திட்டங்கள் கூட தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

வறட்சி காலங்களில் கூட குடிநீர் முறையாக வழங்கப்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாடுபட்டார். 

தொடர்ந்து, தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எம்பி.,கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஊட்டி மத்திய பஸ் நிலையம் விரைவில் சீரமைக்கப்படும். பெரியார் தமிழகத்தின் தந்தை. அவரை பற்றி யாரும் விமர்சிக்க கூடாது, என்றார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...