கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி மரணம்

கொலை வழக்கிற்காக ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையிலடைக்கப்பட்ட கைதி ரீஸ்வான் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மரணமடைந்தார்.

கோவை : கொலை வழக்கிற்காக ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையிலடைக்கப்பட்ட கைதி ரீஸ்வான் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மரணமடைந்தார்.

கோவை சாய்பாபா காலனி கே.கே புதூரை சேர்ந்தவர் கமல் பாட்சா. இவரது மகன் ரிஸ்வான்(38). இவர் கடந்த 1997-ம் ஆண்டு ஆசிரியர் கிருஷ்ணசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றார். இந்நிலையில் இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 



இதனையடுத்து, ஒரு சில தினங்களுக்கு முன் பரோலில் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தவருக்கு நேற்று இரவு மீண்டும் வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 10.15 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரிஸ்வான் இறந்து விட்டதாக கூறினார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உடற்கூறியல் துறையில் வைக்கப்பட்டுள்ளது. 



இந்நிலையில் சிறைத்துறையில் நேற்றிரவு போதுமான சிகிச்சை அளிக்காததால்தான் அவர் இறந்து விட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி அவரது உடலை வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து அவரது  உறவினர் இப்ராகிம் பாதுஷா கூறியதாவது, என் மைத்துனருக்கு இரவே உடல் நிலை சரியில்லை.ஆனால் சிறை துறை நிர்வாகம் மருத்துவ மனைக்கு இரவே அழைத்து வந்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார் என்றார்.

இது குறித்து இஸ்லாமிய கூட்டமைப்பை சேர்ந்த ஹக்கீம் கூறுகையில், "சிறைவாசிகளுக்கு போதிய சிகிச்சை இல்லாததால் சிறை மரணங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. சிறையில் சிறந்த மருத்துவர்கள் இல்லை. பார்மால்டிகளை கடந்து தான் அவசர சிகிச்சைக்கும் அனுமதிக்கப்படுவது வேதனையளிக்கிறது. சிறையில் உள்ள முறைகேடுகள் குறித்து பேசும் வரை நாங்கள் உடலை வாங்கமாட்டோம்."என்றார். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...