உதகையில் தொடங்கியது சீசன் : அதிகரிக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள உலக புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா அனைவரையும் கவர்ந்து வருகிறது. குறிப்பாக, இயற்கை சூழ்ந்த இடமாகவும், அரிய வகை மரங்கள் மற்றும் பல்வேறு வண்ண மலர்கள் என இங்கு வரும் சுற்றுலா பயணிகளை இப்பூங்கா கவர்ந்துள்ளது.

மேலும், தாவரவியல் பயிலும் மாணவர்கள் இங்குள்ள தாவரங்களை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதனால், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிகின்றனர். இந்நிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை, கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2016 முதல் 2017-ம் ஆண்டு வரை 8,983 பேர் வருகை புரிந்துள்ளனர். இந்தாண்டு 2017-2018ஆம் ஆண்டில் நேற்று வரை 10,413 பேர் பூங்காவிற்கு வருகை புரிந்துள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறித்து பூங்கா நுழைவு வாயில் பகுதியில் வருகை பதிவேடு மூலம் அவர்கள் பெயர், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என பூங்கா ஊழியர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...