சிறையில் மரணமடைந்த கைதியின் உடல் அடக்கம் : சீமான், தனியரசு ஆகியோர் மரியாதை

கோவை சிறையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த கைதி ரிஸ்வானின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

கோவை : கோவை சிறையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த கைதி ரிஸ்வானின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள்தண்டனைக் கைதியான ரிஸ்வான் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். சிறையில் முறையான சிகிச்சை அளிக்காததால் தான் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில், ரிஸ்வானின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக மேம்பாலம் வழியாக ப்ரூக்பாண்ட் சாலையைக் கடந்து, ஹைதர் அலி திப்பு சுல்தான் தக்னி சுன்னத் ஜமாத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, உடல் வைக்கப்பட்டு, அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க ஊர்வல கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.



பின்னர், ரிஸ்வானின் உடல் சாய்பாபா காலனியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு மற்றும் இஸ்லாமிய இயக்கங்களைச் சேர்ந்த பலர் மரியாதை செலுத்தினர். பின்னர், மீண்டும் பூமார்க்கெட்டில் உள்ள பள்ளி வாசலுக்கு உடல் கொண்டு வரப்பட்டு, அவருக்கு இஸ்லாமியர் முறைப்படி கடைசி மரியாதை செலுத்தப்பட்டது. இறுதியில், ரிஸ்வானின் உடல் பூமார்கெட் பள்ளிவாசலில் உள்ள மைதானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.



ரிஸ்வானின் இறுதிச் சடங்கையொட்டி, கோவை அரசு மருத்துவமனை, சாயிபாபா காலனி, வடகோவை, பூமார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...